வெவேறு தருணங்களில் எழுதிய ஹைக்கூ கவிதைகள் உங்கள் பார்வைக்காக. இதில் உங்களுக்கு எது பிடித்தது என்று ‘கமெண்ட்ஸில்’ சொல்லவும்.
ஹைக்கூ
இரு தனி வரிகளாய் இருந்த அவளும் அவனும் இணைந்து- ஒரே பொருள் தரும் குழந்தையாய்-ஓர் கவிதை!
உறவு
உயிர்களை இணைத்து, பின்
பிரிவினால் பிணமாக்கும்,
பாசக்கயிறு !
மின் விசிறி
தலைகீழாய் தொங்கி நடனமாடும் கழைக்கூத்தாடி!
தினசரி காலேண்டர்
பிறருக்கு பலனை சொல்லும் அவளுக்கு, ஏனோ தெரியவில்லை, தனக்கு விதித்தது மரணம் என்று...